ஒப்பந்தகளை மீறி தமது நாட்டு விமானத்தை பயன்படுத்தியதற்காக பாகிஸ்தானின் மீது அமெரிக்கா கண்டனங்களை வெளியிட்டுள்ளது. கடந்த பெப்பரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக எப் 16 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதன்பின்னர் இந்திய படையினர் குறித்த விமானத்தை சுட்டுவீழ்த்தினர். அமெரிக்க தயாரிப்பான குறித்த போர் விமானத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியமை தொடர்பில் அமெரிக்காவுக்கு ஆதாரங்களுடன் இந்தியா தகவல் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒப்பந்தங்களை மீறி போர் விமானங்களை பயன்படுத்தியதற்காக பாகிஸ்தான் மீது அமெரிக்கா கண்டனங்கள் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.