யாழ்ப்பாணத்தில் பட்டம் விட்டு விளையாடிய சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித் துறையில் பட்டம் விட்டு விளையாடிய 17 வயதான சிறுவன் தவறி கிணற்றில் வீழ்ந்துள்ளான். எனினும் உடனடியாக செயற்பட்ட அயலவர்கள் சிறுவனை மீட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.