நோயற்ற ஆரோக்கியமான பரம்பரையை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார். புகையிலை மற்றும் மதுபான பாவனையிலிருந்து அவர்களை முற்றாக விடுவிப்பதே பிரதான நோக்கமாகும். இதன் ஊடாக தொற்றா நோயை கட்டுப்படுத்த முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். செயன்முறை திட்டமொன்று இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் மற்றும் சுதேச வைத்திய துறைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.