அமெரிக்கா, வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏவுகணை வேலைத்திட்டங்களை நிறுத்துமாறு அறிவித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த தினங்களில் வடகொரியா ரகசிய பரிசோதனைகள் பலவற்றை மேற்கொண்டிருந்தது. குறித்த செயற்பாடனது சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதேவேளை வடகொரியாவின் ஆயுத தயாரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.