இலங்கையுடன் காணப்படும் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் பலப்படுத்தப்படுமென பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப்அல்வி தெரிவித்துள்ளார். இலங்கை உயர்ஸ்த்தானிகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகால உறவுகள் காணப்படுகின்றன. அதை பல்வேறு துறைகளின் ஊடாக மேலும் பலப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.