நாட்டை சூழவுள்ள கடல்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை முதல் மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்குமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் சப்ரகமுவ , மேல், மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் ஒரு மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.