சுவிசர்லாந்தின் தூதரக அதிகாரி இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு நீதிமன்ற வைத்தியரின் விசாரணை அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அவர் முகங்கொடுத்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் 3 சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். நீதிமன்ற சட்டவைத்தியர் முன்னிலையில் இரு தடவைகள் ஆஜராகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.