தேயிலை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய விரிவான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மூடப்பட்டுள்ள தேயிலை தொழிற்சாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஒருசில நபர்களின் சொத்துக்கள் வங்கிகளில் மூழ்கும் அவதான நிலை ஏற்பட்டுள்ளது. எவ்வாறெனினும் அவர்களுக்கு மேலதிக காலத்தை வழங்குமாறு அரச மற்றும் தனியார் வங்கிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். இதேவேளை அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.