2019 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாபிரிக்கா கிரீடம் சூடியுள்ளது. அமெரிக்காவின் அலன்டாவில் இது தொடர்பான வைபவம் இடம்பெற்றது. தென்னாபிரிக்காவின் 26 வயதான சொசுபினி டுன்சி பிரபஞ்ச அழகி மகுடத்தை சூடிக் கொண்டார். புவாட்டாரிக்கோ மற்றும் மெக்சிகோ நாடுகள் 2 வது மற்றும் 3 வது இடங்களை வென்றென மகுடத்தை சூடுவதற்கு முன்னர் சொசுபினி ஆற்றிய உரையானது அனைவரது அவதானத்தை ஈர்த்ததது.
90 போட்டியாளர்களை தோல்வியடையச் செய்தே அவர் இச்சாதனையை படைத்தார். 2018 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகிப்போட்டியில் தாய்லாந்து மகுடம் சூடியிருந்தது. பிரபஞ்ச அழகி உலகிலுள்ள பெண்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காகவும் அவர்களது அபிமானத்திற்காகவும் தொழிற்சார் ரீதியில் பிரபஞ்ச இலக்கினை அடைவதில் நோக்கமாக கொண்டுள்ளன. 1952 ஆம் ஆண்டு முதல் தடவையாக பிரபஞ்ச அழகிப்போட்டி நடைபெற்றதுடன் பின்லாந்தை சேர்ந்த 17 வயதுடைய அர்மி குசேலா அதில் கிறீடத்தை சூடியிருந்தார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் அதிக தடவைகள் மகுடம் சூடிய நாடுகள் பட்டியலில் வெனிசுலா முதலிடத்தில் உள்ளது.