ஹங்வெல்ல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இருவர் பலியாகினர்.
அவிசாவளை பகுதியிலிருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மீபே பிதேசத்திலிருந்து வருகை தந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டுள்ளது. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் அவ்வீதி ஊடாக வந்த லொறியொன்யுடன் மோதி இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் இருந்த நபர் படுகாயமடைந்து அவிசாவளை வைத்தியசாலையில் சிகிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் இறந்த இருவர்களும் 26 மற்றும் 29 வயதுடைய பண்டராகம பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.