யேமனில் இடம்பெற்றுவரும் தாக்குதலினால் மூவாயிரத்து 500 க்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக புதிய அறிக்கையொன்றின் ஊடாக தெரியவந்துள்ளது. 800 க்கும் அதிகமான சிறுவர்கள் அங்கவீனமடைந்துள்ளனர்.
மேலும் 4 இலட்சம் சிறுவர்கள் குறைபோசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக யேமனில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது. 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரை 7 ஆயிரத்து 500 க்கும் அதிகமான சிறுவர்கள் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.