கினிகத்தேனை களனி கங்கையில் நீராடச்சென்ற இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாங்கொட உடகம பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தனது உறவினர் வீட்டுக்கு வருகைதந்திருந்த நிலையில், அவர் அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார். கினிகத்தேன பொலிசார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.