மௌரிடானியா கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 62 பேர் பலியாகியுள்ளனர். கம்பியா நாட்டவர்களை ஏற்றிச்சென்ற படகே விபத்தை சந்தித்துள்ளது. குறித்த படகு ஸ்பெய்ன் நாட்டிற்கு புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்குண்ட 83 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் காணாமல்போயுள்ளதாக ஆபிரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மௌரிடானியா கடலோர காவல் படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.