கொத்மலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நாடு முழுவதும் சுற்றுச்சூழலை சுத்தப்படும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய கொத்மலை, ரம்பொட சுரங்கத்திற்கு அருகில் இன்று காலை சுத்தப்படும் வேலைத்திட்டம் இடம்பெற்றது. கொத்மலை பொலிசார் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து செயற்திட்டத்தை முன்னெடுத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.