பொருளாதாரத் தடைகளை நீக்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவுள்ளதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தை இரத்துச் செய்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்குத் தீர்வு காண உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.