இலங்கையில் இடம்பெற்ற மிகப் பாரிய விமான விபத்து சம்பவத்திற்கு இன்றுடன் 45 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 1974 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புனித ஹச் யாத்திரைக்கு சென்றுகொண்டிருந்த ஒல்லாந்து நாட்டிற்கு சொந்தமான மார்ட்டின் எயார் டி சி 08 என்ற விமானம் இந்தோனேசியாவில் சுர வெயார் விமான நிலையத்தில் இருந்து 182 யாத்திரிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புனிய ஹச் யாத்திரைக்காக மக்கா நோக்கி சென்றுகொண்டிருந்து.
இந்த விமானம் மலையகத்தில் அக்கரப்பத்தன, நோர்வூட் காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நேராக சென்றுகொண்டிருந்த போது அன்றைய தினம் இரவு 10.10 மணிக்கு நோட்டன் பிறீச் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெவடன் தோட்டத்திற்கு மேலாக ஏழு கன்னி மலையில் விமானம் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் 191 பேர் உயிரிழந்தனர். விமான விபத்தில் உயிரிழந்த 190 பேரின் சடலங்கள் இந்த மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன. இச் சம்பவத்தில் ஒரு பெண்ணின் சடலம் மாத்திரம் அவரது காதலரினால் இந்தோனேசியாவில் இருந்து ஹெலிகெப்டர் மூலம் இங்கு வந்து இந்தோனேசியாவிற்கு எடுத்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.