டொனால்ட் டிரம்பை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்குவதற்காக குற்றப்பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கான முக்கிய பல சாட்சிகள் காணப்படுவதாக அது தொடர்பாக கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு தெரிவிக்கின்றது. இதனால் குற்றப்பிரேரணையை துரிதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதற்கென நியமிக்கப்பட்ட ஜனநாயக கட்சி குழு தெரிவிக்;கின்றது. தற்போது அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னரும் டொனால்ட் டிரம்ப் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளார். இதுவும் அடுத்தாண்டில் நடைபெறவுள்ள தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படுகின்ற சேறு பூசும் நடவடிக்கை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் இன்னொரு நாட்டுடன் இரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேச பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் ஜனநாயக கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.