பிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. குறித்த பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கவுள்ளது.
பொதுமக்களின் எழுத்துமூல கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் பிரச்சினைக்கான மூலங்களை கண்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது இதன் நோக்கமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை உடனடியாக தொடர்புகொள்வதும் குறித்த பிரிவின் பிரதான நோக்கமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த பிரிவின் அங்குரார்ப்பண நிகழ்வில் குறிப்பிட்டார்.
பிரதமரின் பொதுமக்கள் தொடர்புகள் பிரிவு அலரி மாளிகைக்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.