மழையுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு
Related Articles
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல். 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரேலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும். மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் 55 கிலோ மீற்றர் வேகத்தில் மிகவும் வலுவான காற்று வீசக்கூடும்.
வட மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.