பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதற்கமைய நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாகவும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெறும் எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.