நாட்டின் அனைத்து நகரங்களிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மற்றுமொரு கட்டம் இன்று காலை ஹெம்மாத்தகம நகரை கேந்திரமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரதேசவாசிகள் , நகரின் வர்த்தக சமூகத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சங்கத்தின் உறுப்பினர்களும் வேலைத்திட்டத்தில் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்தும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்றும் வேலைத்திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.