அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பி.டீ.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு குறித்த விடயத்தை எழுத்துமூலம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.