வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. நேற்றையதினம் இரு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தொடர்பான தரவுகள் தமது ரேடார் அமைப்பிலும் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை தமது வான்பரப்பு அல்லது பொருளாதார வலயத்திற்குள் நுழையவில்லையெனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.