நாட்டில் சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பிற்பகல் வேளையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். கரையோர பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென வானிலை அதிகாரி தெரிவித்தார்.