பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு சுலோவாக்கிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொதியிடல் உற்பத்திகளையும் தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2021 ம் ஆண்டளவில் குறித்த தீர்மானம் நடைமுறைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய சங்கம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை இல்லாதொழிப்பதற்கென விசேட திட்டமொன்றை வகுத்துள்ளது. அதற்கமைய குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாக ஸ்லோவாக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மாறாக சூழலுக்கு ஏற்ற உற்பத்திகளை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.