ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 8 சிறுவர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் வண்டியொன்றில் பொருத்தப்பட்டிருந்த குண்டே இவ்வாறு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்தவொரு அமைப்பும் ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலிபான் அமைப்பினர் அந்நாட்டின் பல பிரதேசங்களில் தாக்குதலை மேற்கொண்டனர். குறித்த தாக்குதலையும் தலிபான் அமைப்பினர் மேற்கொண்டிருக்கலாமென அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.