வளி மாசடைவை கட்டுப்படுத்துவதற்கென இந்திய அரசாங்கம் உடனடி திட்டமிடல்களை முன்வைக்க வேண்டுமென அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. வாயு மாசடைவால் தற்போது பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் 10 தினங்களுக்குள் புதுடில்லி நகரில் வாயு மாசடைவை முற்றாக நீக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்குமாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.