கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை வரையான புதிய அலுவலக ரயில் இன்றுமுதல் சேவையில் ஈடுபட்டுள்ளது. அதிகாலை 4.35 க்கு கண்டியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. காலை 7.16 க்கு குறித்த ரயில் கொழும்பு கோட்டையை வந்தடைந்துள்ளது. மீண்டும் 5.10 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயிணல் இரவு 7.44 க்கு கண்டியை சென்றடையுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.