இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர் இது திட்டமிட்ட சதியென்றும் தனது பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும் என்றும் கூறியுள்ளார். இலஞ்ச ஊழல் மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட 3 வழக்குகளுக்கு இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களிடம் இருந்து பரிசு பொருட்களை நெத்தன்யாகு பெற்றதாகவும், அவரை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டுமென்று செயற்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சட்ட மாஅதிபரினால் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கையானது தன்னை பிரதமர் பதவியில் இருந்து பதவி கவிழ்க்கச்செய்வதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களுக்காக தான் பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விசாரணையில் உண்மை நிலையை தேடாமல் பழிதீர்க்க முயற்சிப்பதாக கூறிய அவர் இஸ்ரேல் மக்கள் விசாரணை அதிகாரிகளை விசாரிக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.