இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி பொருளாதாரம் கொள்கை அபிவிருத்தி புத்தசாசனம் கலாசாரம் மற்றும் சமய விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீட்டு வசதிகள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நிமல் சிறிபால டி சில்வா – நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம் அமைச்சர்
ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
தினேஷ் குணவர்தன – வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழில் துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் மற்றும் நீரியல்வளமூலங்கள் அமைச்சர்
பவித்ரா தேவி வன்னி ஆராச்சி – மகளிர் சிறுவர் விவகார அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
பந்துல குணவர்தன – தகவல் தொலைதொடர்பு உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும்புத்தாக்க அமைச்சர்
ஜனக்க பண்டார தென்னகோன் – பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்
சமல் ராஜபக்ஷ – மகாவலி விவசாயம் நீர்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு, நுகர்வோர் நலன்னோன்புகை அமைச்சர்
டளஸ் அழகப்பெரும – கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ – வீதி நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர்
விமல் வீரவன்ச – சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் தொழில் முயற்சி அபிவிருத்தி கைத்தொழில் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர்
மஹிந்த அமரவீர – பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மின்சாரம் மற்றும் மின்சக்தி அமைச்சர்
எஸ்.எம். சந்தரசேன – சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அபிவிருத்தி காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – கைத்தொழில் ஏற்றுமதி முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர்