தேயிலை உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கென விரிவான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இதன் ஊடாக உற்பத்தியை அதிகரிக்கப்படுவதோடு, புதிய சர்வதேச சந்தை வாய்ப்புக்களை அதிகரிக்க முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக், ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தேயிலைக்கு அதிக கேள்வி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.