காஷ்மீரின் சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாமொன்றுக்கு அருகில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரின் உடல்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.