அமெரிக்க குடியேற்ற சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசேட கவனம் செலுத்தியுள்ளது. இலட்சக்கணக்கான சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுதந்திரம் பறிக்கப்பட்டமை மற்றும் பெற்றோரிடமிருந்து விலகியுள்ளமையே இதற்கு காரணமாகும். இந்நிலையில் குறித்த நிலையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.