டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வப்போதான மழைவீழ்ச்சி காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் டெங்கு நோயின் தாக்கம் ஓரளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த வார நிறைவு வரை 65 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவானதாக அவர் தெரிவித்தார். டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பதை தடுப்பதற்கு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
நாட்டிலுள்ள 44 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தை மையப்படுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 6 நாட்களுக்கு கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்தார்.