ஈரானில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்ததால் அந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து பெட்ரோல் மீதான மானியத்தை ஈரான் அரசு நீக்கி உள்ளது. இதனால் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தகவல்கள் தெரிவிக்கின்றன.