பலம்வாய்ந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தயாரென அமெரிக்கா அறிவித்துள்ளது. பலம் வாய்ந்த இறைமையுள்ள இலங்கைக்காக அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.