ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஷ சிறப்பான ஆட்சிக்கு வித்திடுவாரென நம்புவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுள்ள அவர் நாட்டின் பிரதான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவாரென எதிர்பார்ப்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை வழங்ககூடியவர் என சி.வி.விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்தார்.