இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரையில் நிகழ்வு இடம்பெற்றது. பதவிப்பிரமாணத்தையடுத்து புதிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் உட்பட அதிகளவான பொதுமக்கள் நிகழ்வில் கலந்துகொண்டதாக அங்கிருக்கும் எமது விசேட பிரதிநிதி தெரிவித்தார்.