ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட படைப்பிரிவினரின் சுற்றிவளைப்பில் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு அருகில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். ரம்புக்கன மற்றும் ஹிரிவடுன்ன பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் தொடர்பில் கேகாலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.