இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அடையாள அட்டைகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டன. மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக கிராம சேவகர்களுக்கு அடையாள அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்கள் கிராம சேவக அதிகாரிகளிடம் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும். வாக்களிப்புக்கு மாத்திரமே தற்காலிக அடையாள அட்டையை பயன்படுத்த முடியுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.