வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கென சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 3 ஆயிரத்து 100 பஸ்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாரச்சி தெரிவித்துள்ளார்.
விசேட ரயில் சேவைகளும் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.