நாடளாவிய ரீதியில் அனைத்து வாக்களிப்பு மத்திய நிலையங்களின் பாதுகாப்புக்கென பொலிஸ் அதிகாரிகள் இருவர் வீதம் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென 45 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.