அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிஷப் தையுப் அர்துகான் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் சிரியாவின் தற்போதய நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை இரு தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தையானது சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.