ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள் நடைமுறைப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்கென கொழும்பிலிருந்து சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் நலன்கருதி விசேட பஸ் சேவை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இன்றைய தினம் 21 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு, நாளைய தினம் 118 பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேவைக்கேற்ப 12 மாகாணங்களிலிருந்தும் கொழும்புக்கு பஸ்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை முதல் சகல மாகாணங்களிலும் இருந்து கொழும்புக்கு மீள தமது பணிகள் நிமித்தம் தலைநகருக்கு திரும்பும் மக்களின் நலன்கருதி போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களில் அதிகளவானோர் தபால்மூல வாக்காளர்களாவர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் சிறப்பு தேர்தல் போக்குவரத்து கடமைகளில் அவர்களை ஈடுபடுத்துவதில் எவ்வித சிக்கலும் இல்லையென இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ் அதிகாரிகளின் போக்குவரத்துக்கென 150 பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்நிலையில் தேர்தல் தினத்தன்றும், தேர்தல் நடவடிக்கைகளுக்கெனவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆயிரம் பஸ்களை வழங்க இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.