ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் தமக்கு தெரியுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் தமது பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருவதாக் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் அல்பக்தாதி அமெரிக்க படையினரால் அண்மையில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி ஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் புதிய தலைவருக்கு மிகப்பெரிய சிக்கல்கள் காத்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் அதிகமாக பரவியுள்ள நிலையில் அவர்கள் மீதான தாக்குதல் தொடருமென அமெரிக்க பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.