சிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால் 200 யானைகள் உயிரிழந்துள்ளன. ஒக்டோபர் மாதம் பருவமழை பெய்யாததால் சிம்பாப்வேயில் கடும் வரட்சி நிலவுகிறது. இதனால் அங்குள்ள விலங்கியல் பூங்காக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பூங்காவிலுள்ள விலங்கள் மற்றும் பறவைகள் என்பன உணவு மற்றும் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடுமையான வறட்சி காரணமாக சிம்பாப்வேயிலுள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டசிவிங்கிககள் மற்றும் 2000 யானைகளை வேறு இடத்திற்கு மாற்ற சிம்பாபே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.