இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உத்தியோகபூர்வ விஜயமாக நாளை இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளார். இரு தினங்கள் அந்நாட்டில் தங்கவுள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும் பல்வேறு நிகழ்வுகளில் இளவரசர் சார்ல்ஸ் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இயற்கை அனர்த்தம் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது தொடர்பில் இந்திய வானிலை ஆய்வு அதிகாரிகளுடன் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களை சந்திக்கவுள்ள இளவரசர் நிலையான சந்தை நிலவரத்தை கண்டரிவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் தனது 71 வது பிறந்த தினத்தை , எதிர்வரும் 14ம் திகதி இந்தியாவில் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.