சிரியாவில் நடத்தப்பட்ட கார்க்குண்டு தாக்குதலில் அறுவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று கார்களில் குண்டு பொருத்தப்பட்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகளவான குர்திஸ் போராளிகள் தங்கியுள்ள பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.