சுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 10 மாதங்களில் 15 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
எனினும் கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில் நூற்றுக்கு 20 வீதத்தால் சுற்றுலா பயணிகளின் வருகையில் இவ்வாண்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுற்றுலா துறை முழுமையாக பழைய நிலையை அடைவதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.