ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். இதுதொடர்பான நேரடி காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிசார் அங்கிருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். ஹொங்கொங்கின் சாவோஷ் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் உயிரிழக்கவில்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கானவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமென ஹொங்கொங் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தையடுத்து ஹொங்கொங் பொலிசாருக்கு எதிராக கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.